யார் முட்டாள்...?
................................
ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது..
அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..
அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்கு மாறு கேட்டான்..
ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..
ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்..
இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக் கொண்டு சென்றான்..
ஆத்திரமடைந்த முதல் வியாபாரி,அந்த வழிப் போக்கனை பார்த்து,
“அட அடி முட்டாளே!
அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்...இப்படி அடிமாட்டு விலைக்கு அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்..
அதற்கு அவன்,
அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவு தான்.
.ஆனால்..,
அது வைரம் என்று தெரிந்து இருந்தும்,அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும் என்று அறிந்து இருந்தும்,அதை வாங்காமல் தவறவிட்ட நீ தான் உலகின் மிகப் பெரிய அடிமுட்டாள்” என்றான்..
ஆம்,நண்பர்களே.,
சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்து இருந்தும் கிடைத்ததை விட்டுவிட்டுத் பலர் தவிக்கிறார்கள்..
முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுபவர்கள் மிகவும் எளிதாக கிடைத்ததை இழந்து நிற்பதோடு வாழ்வில் தோல்வியும் அடைவார்கள்.,