ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பெண்களே! உங்க மார்பகம் குட்டியா இருக்கா? இதோ அதை பெரிதாக்க உதவும் உணவுகள்!


பெண்களே! உங்க மார்பகம் குட்டியா இருக்கா? இதோ அதை பெரிதாக்க உதவும் உணவுகள்!

*பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் மார்பகம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. ஆனால் அந்த மார்பகம் மிகவும் சிறியதாக இருந்தால், மற்றவர்கள் அவர்களை கிண்டல் செய்வார்கள். ஆகவே குட்டியாக மார்பகங்கள் கொண்ட பெண்கள், தங்கள் மார்பகங்களின் அளவை அதிகரித்து வெளிக்காட்ட நிறைய வழிகளை முயற்சிப்பார்கள்.*

அதில் சில பெண்கள் பேடட் பிரா அணிந்து தங்களின் மார்பகங்களை பெரியதாக காட்டிக் கொள்வார்கள். என்ன தான் பேடட் பிரா பயன்படுத்தி மார்பகங்களை பெரியதாக காட்டிக் கொண்டாலும், இயற்கையாகவே தங்களின் மார்பகம் பெரியதாக இல்லையே என்ற வருத்தம் இருக்கும். ஆனால் மார்பகங்களின் அளவை அதிகரிக்க, உடலில் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, புரோட்டீன், கார்போஹைட்ரேட், வைட்டமின்களும் அவசியம். அதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இங்கு மார்பகங்களில் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து, அவற்றை பெண்கள் உட்கொண்டு வந்தால், குட்டியாக இருக்கும் மார்பகங்களை பெரிதாக்கலாம்.

சோயா
சோயாவில், மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும் ஜெனிஸ்டின் மற்றும் மற்ற ஐசோப்ளேவன்கள் உள்ளன. எனவே சோயா பொருட்களான சோயா பீன்ஸ், சோயா பால் மற்றும் மீல்மேக்கர் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வந்தால், மார்பகங்களின் அளவை அதிகரிக்கலாம்.

சோம்பு/சீரகம்
சோம்பு/சீரகத்தில் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் என்னும் மார்பகங்களின் அளவை இயற்கையாகவே அதிகரிக்கும் பொருள் உள்ளது. ஆகவே இதனை குட்டியான மார்பகம் உள்ள பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், விரைவில் மார்பகத்தின் அளவை அதிகரிக்கலாம்.

பால் பொருட்கள்
பால் பொருட்களான பால் மற்றும் தயிரை தினமும் அதிகம் உட்கொண்டு வந்தால், அது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து, மார்பகங்களின் அளவை அதிகரிக்கும்.

மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்களான கிராம்பு, சேஜ் மற்றும் கற்பூரவள்ளி போன்றவற்றை சாலட்டுகளில் சேர்த்து வந்தால், மார்பகங்களின் அளவு அதிகமாகும்.

பீட்ரூட்
பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டக்கூடியது மற்றும் மார்பகங்களின் அளவை அதிகரிக்கக்கூடியதும் கூட.

கேரட்
கேரட்டில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜென் உள்ள. இவை மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும். அதிலும் இதனை ஜூஸ் அல்லது பாதியாக வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும்.

தானியங்கள்
தானியங்கள், மார்பகங்களில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் இது மார்பக புற்றுநோய் வருவதையும் தடுக்கும்.

நட்ஸ்
நட்ஸில் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் உள்ளது. அதிலும் பிஸ்தா, வால்நட்ஸ், முந்திரி போன்றவற்றை உட்கொள்வது மிகவும் நல்லது. அதுவும் தினமும் இவற்றை உட்கொண்டு வந்தால், மார்பகங்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பழங்கள்
பழங்களில் பீச், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென்கள் உள்ளன. ஆகவே இந்த பழங்களை அதிகம் உட்கொண்டு வந்தால், மார்பகங்கள் பெரிதாவதைக் காணலாம்.

ஒயின்
ரெட் ஒயின், ஒயிட் ஒயின் போன்றவற்றை தினமும் சிறிது குடித்து வந்தால், மார்பகங்களில் உள்ள திசுக்களின் வளர்ச்சி அதிகரித்து, மார்பகங்கள் பெரிதாகும். மேலும் இவற்றைக் குடித்து வந்தால், சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருவது தடுக்கப்படும்.

மூலிகை தேநீர்
ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ போன்றவற்றிலும் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென்கள் உள்ளன. ஆகவே இவற்றை அன்றாடம் சிறிது குடித்து வந்தாலும், மார்பகங்களின் அளவு அதிகரிக்கும்.

புரோட்டீன் உணவுகள்
புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளும் மார்பகங்களின் அளவை அதிகரிக்கும். அதற்கு பால், முட்டை, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் சிக்கன் போன்றவற்றை நன்கு உட்கொள்ள வேண்டும்.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளும் மார்பக திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். எனவே கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வர வேண்டும்.

கொண்டைக்கடலை
வெள்ளை மற்றும் கருப்பு நிற கொண்டைக்கடலைகளில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக உள்ளது. இவை மார்பக திசுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரியும். ஆகவே மார்பகங்களை பெரிதாக்க விரும்புபவர்கள், இவற்றை அன்றாடம் உட்கொள்வது நல்லது.

வெள்ளி, 15 நவம்பர், 2019

உலக பொறுமை தினம் நவம்பர் 16.

உலக பொறுமை தினம் நவம்பர் 16.

பொறுமை: மூன்று குட்டிக் கதைகள்!

புத்தரும் பூர்ணாவும்

புத்தரின் சீடர்களில் முக்கியமானவர் பூர்ணா. அவர் தர்மப் பிரசாரம் செய்யப் புறப்படுவதற்கு முன்னால் புத்தரின் அனுமதியைக் கோரினார்.

உடனே அவர்கள் இருவரிடையே நடந்த சம்பாஷனை பின்வருமாறு:–

“பூர்ணா, எங்கே போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய்?

குருவே, சூனப்ராந்தம் என்ற இடத்தில்

அதுவா? அங்குள்ள்வர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாயிற்றே; உன் அறிவுரைகளை ஏற்காமல் உன்னை இகழ்ந்து பேசினால் என்ன செய்வாய்?

அதனால் என்ன? கையால் அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்வேன்.

சரி, அப்படி கைகளால் குத்து விட்டால்?

அதனால் என்ன, ஆயுதங்களைக் கொண்டு தாக்கவில்லையே என்று எண்ணி மகிழ்ந்து என் தர்மப் பிரசாரத்தைத் தொடருவேன்.

அது சரி, ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால் என்ன செய்வாயாம்?

அதனால் என்ன, ஆளைக் கொல்லவில்லையே, அந்த அளவுக்கு நல்லவர்கள்தான் என்றெண்ணி என் பணியைத் தொடருவேன்; என் கடன் பணி செய்துகிடப்பதுவே!

சரி, உன்னைக் கொன்றுபோட்டுவிட்டால்……?

மிகவும் மகிழ்ச்சியுடன் இறப்பேன்; அட இவ்வளவு சீக்கிரம் நிர்வாண நிலையை (முக்தி) அடைய உதவினார்களே! என்று அகம் மகிழ்வேன்; உளம் குளிர்வேன் என்று பூர்ணா பதிலிறுத்தார்.

புத்தர், “பூர்ணா, உன் இஷடப்படியே செய்; நீ பரிபூரண பக்குவம் பெற்றுவிட்டாய்” என்று சொல்லி பொறுமையின் சின்னமான பூர்ணாவுக்கு ஆசிவழங்கினார்.

#newton

ஐசக் நியூட்டன்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஒரு நாயை வளர்த்துவந்தார். அதற்கு டயமண்ட் (வைரக் கல்) என்று பெயரும் சூட்டி அன்பாகப் போற்றி வந்தார். ஒரு நாள் அவர் மாலையில் உலாவச் சென்றார். அப்பொழுது அறையின் மேஜை மீது மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அன்று என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. அவர் உலாவச் சென்ற நேரத்தில் அந்த நாய் மேஜை மீது தாவிக் குதித்தது போலும். மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து அங்கு அவர் எழுதிவைத்திருந்த காகிதங்களுக்குத் தீவைத்தது. அத்தனையும் எரிந்து கருகின. அதன் அருமை பெருமை நியூட்ட்ன் ஒருவருக்கே தெரியும். ஏனெனில் அவை அவரது இருபது ஆண்டுக் கால ஆராய்ச்சியின் முடிவுகளடங்கிய காகிதங்கள்.

உலாவச் சென்று திரும்பிய நியூட்டனுக்கு அவற்றைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி. எல்லாம் டயமண்டின் ‘திருவிளையாடல்’ தான் என்பது அவருக்குப் புரிந்தது. அதுவோ தான் செய்த பெரிய தீங்கை அறியாது அன்பாக வாலைக் குழைத்து நியூட்டனை வரவேற்றது.

நியூட்டனைத் தவிர வேறு ஒருவர் அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால், நாயை எத்தி உதைந்து அறைக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தியிருப்பார். ஆனால் நியூட்டனோ அன்பாக நாயை எடுத்துத் தழுவி அணைத்து, “டயமண்ட், நீ செய்த சிறிய காரியத்தின் விளைவுகளை நீ அறியமாட்டாய்” என்றுசொல்லிக் கொஞ்சினார். அது மீண்டும் வாலை ஆட்டி தன் நன்றியைத் தெரிவித்தது. நியூட்டன் மீண்டும் எழுதத் துவங்கினார்.

சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே”- வெற்றி வேர்க்கை

நிறையுடைமை நீங்காது வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள்


அகராதி பிடித்த மனைவியால் ஆங்கில அகராதி எரிந்தது!

டாக்டர் தாமஸ் கூப்பர் என்பவர் முதலாம் எலிசபெத் மஹாராணி காலத்தில் பெரும் ஆங்கில அகராதியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். முன்னரே இருந்த அகராதியில் மேலும் 33,000 சொற்களைச் சேர்க்க அவர் எண்ணினார். இதற்காக அவர் எட்டு ஆண்டுக் காலம் கஷ்டப்பட்டுச் சேர்த்த 33,000 சொற்களைக் காகிதங்களில் எழுதிவைத்தார். அவரது மனைவியோ எழுத்து வாசனை தெரியாத பிடாரி, கொடுமையின் சின்னம். அவர் வெளியே போயிருந்த நேரத்தில் அவரது நூலத்திற்குள் சென்று அத்தனை காகிதங்களையும் குவித்து சொக்கப்பனை கொளுத்தி மகிழ்ந்தாள்.

அந்த முட்டாள் பெண்மணி, தன் கணவர் படித்துப் படித்துப் பாழாய்ப் போய்விடுவாரோ என்று பயந்தாள்! அவர் திரும்பிவந்து பார்த்தபோது அவருக்குப் புரிந்துவிட்டது. எனினும் மனைவியிடம் யார் செய்த வேலை இது? என்று கேட்டார். ஏன்? நான்தான் செய்தேன்! என்றாள் துணிச்சலாக. அவர் சொன்னார், ஓ தீனா, எனக்கு பெரும் தொல்லை செய்துவிட்டாயே – என்று. பின்னர் மீண்டும் எட்டு ஆண்டுகளுக்கு மேஜையில் உட்கார்ந்து பொறுமையாக எழுதி அகராதிப் பணியை முடித்தார்.

பொறுமையின் சின்னம் தாமஸ் கூப்பர் என்றால் மிகையாகாது.

Posted by -
புவனாமகேந்திரன்,
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வியாழன், 5 செப்டம்பர், 2019

மரணத்தை யாராலும் வெல்ல முடியாது என்பதுக்கு ஒரு சிறு உதாரணம்

மரணத்தை யாராலும் வெல்ல முடியாது என்பதுக்கு ஒரு சிறு உதாரணம்

மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ விரும்பினார்.

தன் வீட்டில் 12 மருத்துவர்களை நியமித்தார், அவர் தினமும் முடி முதல் கால் நகங்கள் வரை பரிசோதிப்பார். உண்பதற்கு முன்பு அவரது உணவு எப்போதும் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது.

அவரது தினசரி உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியைக் கவனிக்க மேலும் 15 பேர் நியமிக்கப்பட்டனர். அவரது படுக்கையில் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இருந்தது.

உறுப்பு தானம் செய்ய நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர் இதனால் அவருக்கு தேவைப்படும்போது உடனடியாக தங்கள் உறுப்பை தானம் செய்யலாம். இந்த நன்கொடையாளர்களின் பராமரிப்பையும் அவர் கவனித்துக்கொண்டார்.

அவர் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்தார்.

அவன் தோற்றான்

25 ஜூன் 2009 அன்று, தனது 50 வயதில், அவரது இதயம் செயல்படுவதை நிறுத்தியது. அந்த 12 மருத்துவர்களின் நிலையான முயற்சி பலனளிக்கவில்லை.

கூட, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒருபோதும் ஒரு படி கூட முன்னேறாத நபர், 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்ற முடியவில்லை.

ஜாக்சனின் இறுதி பயணத்தை 2.5 மில்லியன் மக்கள் நேரடியாகப் பார்த்தார்கள், இது இன்றுவரை மிக நீண்ட நேர ஒளிபரப்பு.

அவர் இறந்த நாளில், அதாவது. 25 ஜூன் '09 பிற்பகல் 3.15 மணிக்கு, விக்கிபீடியா, ட்விட்டர், AOL இன் உடனடி தூதர் வேலை செய்வதை நிறுத்தினார். கூகூளில் மைக்கேல் ஜாக்சனை மில்லியன் கணக்கான மக்கள் ஒன்றாகத் தேடினர்.

ஜாக்சன் மரணத்தை சவால் விட்டு ஜெயிக்க முயன்றார். ஆனால் மரணமோ அவருக்கு சவால் விட்டது.

இப்போது சிந்திக்கலாம்.

அலங்கரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள்  பில்டர்கள் அல்லது பொறியாளர்களுக்காக நாம் சம்பாதிக்கிறோமா?

விலையுயர்ந்த வீடு, கார், ஆடம்பரமான திருமணத்தைக் காண்பிப்பதன் மூலம் நாம் யாரைக் கவர விரும்புகிறோம்?

இரண்டு மாதங்களுக்கு முன்பு நீங்கள் கலந்து கொண்ட திருமண வரவேற்பில் உண்ட உணவுப் பொருட்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு நிகழ்வுகள் உங்களுக்கு நினைவு படுத்த முடிகிறதா?

நாம் ஏன் வாழ்க்கையில் ஒரு மிருகத்தைப் போல வேலை செய்கிறோம்?

எத்தனை தலைமுறைகளை நாம் காப்பாற்ற விரும்புகிறோம்?

நம்மில் பெரும்பாலோருக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ளனர். நமக்கு எவ்வளவு தேவை, அவர்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

நம் பிள்ளைகள் அதிகம் சம்பாதிக்க முடியாது என்று நாம் கருதுகிறோமா? எனில் அவர்களுக்காக கூடுதல் கூடுதல் சேமிக்க வேண்டியது அவசியம்?

வாரத்தில் உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ சிறிது நேரம் செலவிடுகிறீர்களா?

நீங்கள் சம்பாதித்ததில் 5% நீங்களே செலவிடுகிறீர்களா?

நாம் சம்பாதித்தவற்றோடு வாழ்க்கையில் ஏன் மகிழ்ச்சியைக் காணவில்லை?

நீங்கள் ஆழமாக சிந்தித்தால், உங்கள் இதயம் வேலை செய்யத் தவறிவிடும். அவ்வாறு இருந்தால் மனசஞ்சலம், அதிக கொழுப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவீர்கள்.

முடிவு: உங்களுக்காக நீங்கள் சிறிது நேரம் செலவிடுங்கள். நம்மிடம் எந்தவொரு சொத்தும் இல்லை சில ஆவணங்களில் மட்டுமே நம் பெயர் தற்காலிகமாக எழுதப்பட்டுள்ளது.

இது என்னுடைய சொத்து என்று நாம் கூறும்போது, ​​கடவுள் நம் மீது ஒரு வக்கிர புன்னகையை வீசி விட்டு கடந்து செல்கிறார்.

ஒரு நபர் தனது கார் அல்லது உடையைப் பார்க்கும்போது ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டாம். சிறந்த கணிதவியலாளர்களும் விஞ்ஞானிகளும் பயணத்திற்கு சைக்கிள் அல்லது ஸ்கூட்டரைப் பயன்படுத்தினர்.

பணக்காரனாக இருப்பது பாவம் அல்ல, ஆனால் பணத்தால் மட்டுமே பணக்காரனாக இருப்பது பாவம்.
வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் வாழ்க்கை உங்களை கட்டுப்படுத்தும்.

வாழ்க்கையின் முடிவில் உண்மையில் முக்கியமான விஷயங்கள் மனநிறைவு, திருப்தி மற்றும் அமைதி. இது தான் மனிதர்களுக்கு தேவை என்பதை மறவாமல் மனதில் கொள்வோம்

நீங்கள் என்ன செலவு செய்தாலும், இவற்றை பணம் கொடுத்து வாங்க முடியாது .

பொருளாதார மேதையும்.... வடை கடைக்காரரும்...


பொருளாதார மேதையும்.... வடை கடைக்காரரும்...

ஒரு கிராமத்தில் ஒருவர் இருந்தார்.ருசியான வித விதமான வடைகள் சுடுவதில் வல்லவர்.அது தான் அவரது தொழிலும் கூட.அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.அதனால் எந்த செய்தித்தாள்களையும் அவர் படிக்க மாட்டார்.செய்தித்தாள்களைப் படிக்கும் பழக்கம் இல்லாததால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.அதனால் டிவி பார்க்கும் பழக்கமும் அவருக்கு இல்லை.

அதனால் அவரது முழுக் கவனமும் அவரது வடை தொழிலில் மட்டுமே இருந்தது.வேறு எந்த சிந்தனையும் அவருக்கு இல்லை.விதவிதமான ருசியான வடைகளைத் தருவதால் அதுவும் குறைவான விலையில் தரமாகத் தருவதால் அவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் கூட்டமும் மிக அதிகமாக இருந்தது.வருமானமும் நிறைவாக இருந்தது.அவரும் மகிழ்ச்சியாக இருந்தார்.

அவருக்கு ஒரு மகன் இருந்தான்.அவன் சென்னையில் மிகப் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் எக்கனாமிக்ஸ் படித்து வந்தான்.பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் மிக ஆக்டிவ்வாக இருப்பான்.விடுமுறையில் ஊருக்கு வந்தான்.அப்படியே தன் தந்தையின் கடைக்கும் போனான்.

அங்கே வடைகளுக்காக விதவிதமான மளிகை சாமான்கள், காய்கறிகள் எண்ணெய் வகைகள் என ஏகப்பட்ட சரக்குகளை தன் தந்தை வாங்கி வைத்து இருப்பதைப் பார்த்தான்.

நேராக தந்தையிடம் சென்றான்,

"என்னப்பா நீ...முட்டாத்தனமா இருக்க...நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்குறது உனக்கு தெரியாதா?பல ஆட்டோமொபைல் கம்பனிங்க சங்கடத்துல இருக்கு.நிறைய ஷோரூம்களை மூடிட்டாங்க.நிறைய பேருக்கு வேலை போச்சு.இது அப்படியே எல்லா இன்டஸ்ட்ரிக்கும் பரவ போகுதாம்.பணக் கஷ்டம் வர போகுதாம்.பேங்குங்க எல்லாம் திவாலாகப் போகுதாம்.அதனால பணத்தை சேர்த்து வையி.இப்படி கன்னாபின்னான்னு சரக்குகளை வாங்கி குமிக்காதே...‌" என்று தான் படித்த மைக்ரோ எக்கனாமிக்ஸ் மற்றும் மேக்ரோ எக்கனாமிக்ஸ் கலந்து லெங்க்த்தாக ஒரு ஸ்பீச் தந்தான்.போதாக்குறைக்கு பொருளாதார மந்தநிலை பற்றி பேஸ்புக்கில் எழுதப்பட்ட ரைட்டப்களையும், வாட்சப்பில் வரும் தகவல்களையும் வேறு தன் தந்தைக்கு காட்டினான்.

இதையெல்லாம் பார்த்த அவனது தந்தையும்,

"ஆஹா நமக்கு தான் எழுதப் படிக்கத் தெரியாது.நம்ம புள்ள மெட்ராஸ்ல படிக்குறவன்.அவன் சொன்னா தப்பா இருக்காது...."என்று எண்ணினார்.

உடனடியாகத் தன்னிடம் இருக்கும் சரக்குகளைப் பாதியாக குறைத்தார்.வாங்கிய இடத்திலேயே அதைத் திரும்பத் தந்தார்.

ஆரம்பத்தில் 50 விதமான வடைகளை விற்றவர், மறுநாளே வடைகளில் வெரைட்டியை 10 ஆக குறைத்தார்.விற்பனையையும் குறைத்தார்.

அவரது கடைக்கு அவரது வெரைட்டியான வடைகளுக்காகவே வந்த கூட்டம் வெரைட்டியான வடைகள் கிடைக்காததால் பாதியாக குறைந்தது.

வாடிக்கையாளர்கள் கூட்டம் பாதியாக குறைந்ததைப் பார்த்து இவரும் தன் விற்பனையை மேலும் சுருக்கினார்.உளுந்த வடையை மட்டுமே போடத் துவங்கினார்.உளுந்த வடையை மட்டும் விரும்பும் வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்கு வந்தனர்.அதைப் பார்த்ததும் மேலும் பதறினார்.

விற்பனை மந்தமாவதால் நாளை முதல் என் வடை கடை காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது...என்ற போர்டை வைத்து கடையை மூடினார்.

தன் மகனை அழைத்தார்,

"ஆமாப்பா...நீ சொன்ன மாதிரியே நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்கு.நம்ம கடைக்கு வர்ற ஆட்கள் கூட குறைஞ்சுகிட்டே போயி...கடைசில யாருமே வரலை... வியாபாரமும் படுத்திருச்சி...இருக்குறதையாவது காப்பாத்தனும்ன்னு நானும் கடையையே மூடிட்டேன்..." என்றார்.

தான் படிக்கும் எக்கனாமிக்ஸ் அறிவைக் கொண்டு தன் தந்தையை தான் காப்பாற்றியதாக மகனும் தனக்குத் தானே பெருமைப்பட்டுக் கொண்டான்.

ஆனால் நன்றாக வியாபாரம் நடந்து கொண்டு இருந்த வடை கடையை எதற்காக அவர் மூடினார் என்பது மட்டும் அவரது வாடிக்கையாளர்களுக்கு கடைசி வரையிலும் தெரியவே இல்லை.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

உருவத்தை பார்த்து



‘’ உருவத்தை பார்த்து .’’
.........................................

ஒருவரின் வெளித் தோற்றத்தை வைத்து யாரையும் எளிதில் எடைபோடக் கூடாது.. அவர்கள் எந்த சூழ்நிலைகளில் எப்படி இருப்பார்கள்.. என்று நமக்கு தெரியாது.

செல்லும் இடத்திற்கு தகுந்த உடைத்தோற்றம் இருக்க வேண்டும் என்பார்கள்..அப்படி இல்லாமல் செல்பவர்கள் மற்றவர்களால் எந்த அளவுக்கு மதிக்கப்படுவார்கள் என்பதை அனுபவித்தவர்களுக்கே புரியும்..

நாஸ்ரதீன் ஹாஸ் ஓர் ஞானி!. துருக்கிய அதிகாரி ஒருவர் ஞானியை விருந்துண்ண வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இவரும் ஒப்புக் கொண்டார்.

அதிகாரியின் வீடு நெடுந்தொலைவில் இருந்தது. கழுதை மீதேறிப் பயணித்தார்.

அதிகாரியின் வீட்டை அடைந்த போது மிகவும் களைப்புடன் காணப்பட்டார். உடையும் மிக அழுக்காக இருந்தது.

அதிகாரிக்கு ஞானியை அடையாளம் தெரியவில்லை. வீட்டு வாயிலிலேயே ஞானி தன்னை அறிமுகம் செய்து கொள்ள முற்படும் முன்பே, பிச்சைகாரர் களுக்கு் இங்கே அனுமதி இல்லை. என்று கடுமையாகக் கூறி உள்ளே சென்று வி்ட்டார், அதிகாரி.

ஹாஸுக்கு் அவர் கொண்டு வந்திருந்த மாற்று உடை கை கொடுத்தது. சிறிது தூரம் வெளியே சென்று விட்டு, அவற்றை அணிந்து அமர்க்களமாகத்  திரும்பி வந்தார்.

இப்போது அதிகாரி ஹாஸை கனிவுடன் வரவேற்றார். நன்கு உரையாடினார். பல்சுவை உணவும் பரிமாறப் பட்டது.

ஞானி, ஒரு சூப் கிண்ணத்தை எடுத்துத் தன் சட்டைப் பைக்குள் ஊற்றினார். சில கறி வறுவல் துண்டுகளை தலைப்பாகைக்குள் திணித்துக் கொண்டார்.

தான் அணிந்திருந்த அங்கியின் கீழ்ப் பகுதியை புலால் இருந்த தட்டில் படும்படிச் செய்தார். அங்கியே தின்னு தின்னு.. என்றார். அனைவரும் திகைத்துப் போயினர்.

அதிகாரிக்கோ. கோபம் தலைக்கேறி விட்டது.. என்ன செய்கிறீர்..? என்று கோபத்துடன் கேட்டார்.

அதற்கு, அந்த ஞானி, சாந்தமாக, சற்று நேரத்திற்கு முன் தாங்கள் உபசரித்தது என்னையல்ல; என் ஆடைகளைத்தான்;

எனவே அவற்றிற்கு உணவு ஊட்டுகின்றேன் ; என்று மறு மொழி பகர்ந்தார். அதிகாரியும் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார்.

ஆம்.நண்பர்களே..,

ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை கிண்டல் அடிப்பது மிகவும் மோசமான செயல்..

அது அவர்களை மிகவும் காயப்படுத்தும்..மற்றும் யாரையும் ஏளனமாக பார்ப்பதும்.. பேசுவதும் தவறு..