‘’ உருவத்தை பார்த்து .’’
.........................................
ஒருவரின் வெளித் தோற்றத்தை வைத்து யாரையும் எளிதில் எடைபோடக் கூடாது.. அவர்கள் எந்த சூழ்நிலைகளில் எப்படி இருப்பார்கள்.. என்று நமக்கு தெரியாது.
செல்லும் இடத்திற்கு தகுந்த உடைத்தோற்றம் இருக்க வேண்டும் என்பார்கள்..அப்படி இல்லாமல் செல்பவர்கள் மற்றவர்களால் எந்த அளவுக்கு மதிக்கப்படுவார்கள் என்பதை அனுபவித்தவர்களுக்கே புரியும்..
நாஸ்ரதீன் ஹாஸ் ஓர் ஞானி!. துருக்கிய அதிகாரி ஒருவர் ஞானியை விருந்துண்ண வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இவரும் ஒப்புக் கொண்டார்.
அதிகாரியின் வீடு நெடுந்தொலைவில் இருந்தது. கழுதை மீதேறிப் பயணித்தார்.
அதிகாரியின் வீட்டை அடைந்த போது மிகவும் களைப்புடன் காணப்பட்டார். உடையும் மிக அழுக்காக இருந்தது.
அதிகாரிக்கு ஞானியை அடையாளம் தெரியவில்லை. வீட்டு வாயிலிலேயே ஞானி தன்னை அறிமுகம் செய்து கொள்ள முற்படும் முன்பே, பிச்சைகாரர் களுக்கு் இங்கே அனுமதி இல்லை. என்று கடுமையாகக் கூறி உள்ளே சென்று வி்ட்டார், அதிகாரி.
ஹாஸுக்கு் அவர் கொண்டு வந்திருந்த மாற்று உடை கை கொடுத்தது. சிறிது தூரம் வெளியே சென்று விட்டு, அவற்றை அணிந்து அமர்க்களமாகத் திரும்பி வந்தார்.
இப்போது அதிகாரி ஹாஸை கனிவுடன் வரவேற்றார். நன்கு உரையாடினார். பல்சுவை உணவும் பரிமாறப் பட்டது.
ஞானி, ஒரு சூப் கிண்ணத்தை எடுத்துத் தன் சட்டைப் பைக்குள் ஊற்றினார். சில கறி வறுவல் துண்டுகளை தலைப்பாகைக்குள் திணித்துக் கொண்டார்.
தான் அணிந்திருந்த அங்கியின் கீழ்ப் பகுதியை புலால் இருந்த தட்டில் படும்படிச் செய்தார். அங்கியே தின்னு தின்னு.. என்றார். அனைவரும் திகைத்துப் போயினர்.
அதிகாரிக்கோ. கோபம் தலைக்கேறி விட்டது.. என்ன செய்கிறீர்..? என்று கோபத்துடன் கேட்டார்.
அதற்கு, அந்த ஞானி, சாந்தமாக, சற்று நேரத்திற்கு முன் தாங்கள் உபசரித்தது என்னையல்ல; என் ஆடைகளைத்தான்;
எனவே அவற்றிற்கு உணவு ஊட்டுகின்றேன் ; என்று மறு மொழி பகர்ந்தார். அதிகாரியும் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார்.
ஆம்.நண்பர்களே..,
ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை கிண்டல் அடிப்பது மிகவும் மோசமான செயல்..
அது அவர்களை மிகவும் காயப்படுத்தும்..மற்றும் யாரையும் ஏளனமாக பார்ப்பதும்.. பேசுவதும் தவறு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக